CLOSE

Thursday, 4 January 2018

என் அக்கா தேன்மொழி - பகுதி - 3


ரவுடியோ "இன்னைக்கு செத்தடி " என்று அமிலத்தை அப்பெண் முகத்தில் ஊற்ற தயாரானான். இதை கேட்டவுடன் அப்பெண்னுக்கு மரண பயத்தில் கத்த முடியாமல் கை, கால்களை துடிக்க செய்தாள்.
*மற்றொரு பெண்ணோ அமைதியாக கூட்டத்தில் உள்ள ஒருவரை இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் மரணபயமில்லாமல்...
ரவிக்கோ,. பதற்றம் அதிகமாகி கொண்டே போனது அந்த சம்பவத்தின் போது அவன் மட்டுமே அருகில் இருப்பது போல் உணர்ந்தான், "என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என மூளை வேகமாக சிந்திக்க தொடங்கியது .
கூட்டத்தில் ஒருவர் , மற்றொரு நபரிடம் " போலிஸ்க்கு போன் பண்ணிட்டேன் , 5 நிமிசம் இவங்கள அந்த ரவுடிங்க எதுவும் பண்ணாம இருந்தா , போலீஸ் வந்து இவங்கள காப்பாத்திடும் " என கூறிக் கொண்டுருந்தார்.
ரவிக்கு ஒரு யோசனை வந்தது 5 நிமிடம் இவர்களை திசை திருப்பினால், அதற்குள் போலீஸ் வந்துவிடும் , இந்த பெண்களும் காப்பாற்றபடுவார்கள் என எண்ணினான்.
"".........அண்ணா... அண்ணா.... ப்ளீஸ்... கொஞ்சம்.. நிறுத்துங்க... ப்ளீஸ்... வெயிட்... ப்ளீஸ்..ணா... " என ரவுடிகளை நோக்கி கத்திக் கொண்டே மூன்று அடி முன் முன்னோக்கி நடந்தான்..
ரவுடிகள் யாருடா இவன் என யோசித்துக் கொண்டே , அமிலம் வைத்திருக்கும் ரவுடி " டேய்... ஒருங்கா.. போய்டு.. இல்ல.. நீயும். பொனமாய்டுவே.." என அதட்டீனான்.
ரவி ஒரு நொடி பயந்து பின்பு தைரியத்தை வர வைத்துக்கொண்டு அந்த ரவுடியிடம்
" அண்ணா என்னண்ணா காதல ஏதுக்கலனு போய் கொலையா பாவம்ணா அவங்க, விட்டுடுங்கணா ப்ளீஸ். " என கூறினான்.
மீண்டும் அதே ரவுடி " டேய் இப்பவும் சொல்றேன் ஓடிரு,* உயிர விட்ராதே" என மிரட்டினான்.
அத்தனை கூட்டத்தில் யாரும் காப்பாற்ற வராத போது, ரவியின் செயல்களை அந்த பயமற்ற பெண்ணோ ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து கொண்டுருந்தாள். இப்போது தான் அப்பெண்ணுக்கு பயம் வந்தது. தன் உயிருக்காக அல்ல...
ரவிக்கோ 5 நிமிடத்தில் இன்னும் 4 நிமிடம் அந்த ரவுடிகளின் கவனத்தை சிதரடித்தால் போதும் என பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
" அண்ணா .... மொதல்ல அவங்களுக்கு உங்க காதல மென்மையா வெளிபடுத்தனும்.....* நீங்க அவங்க அன்பையும் பாசத்தையும் பெற முயற்சி செய்யனும்......*** அவங்களுக்காக நீங்க எதையும் செய்வீங்கனு அவங்கள நினைக்க வைக்கனும்...** இதல்லாம் பன்னாம டேரைக்ட்டா வந்து என்ன லல் பன்னுனா யாரும் உங்கள லவ் பன்ன மாட்டாங்க" " என்றான் ரவி....
*
இந்த வசனம் எல்லாம் சென்ற வாரம் முதன்முதலாக பள்ளியை கட் அடித்து விட்டு புதிதாக சேர்ந்த நண்பர்களுடன் காஞ்சிபுரம் பாபு தியேட்டரில் பார்த்த படத்தில் வந்த வசனங்கள் தான் இவை...
முதல் பெண்ணோ உயிர் பயத்தில் அரைமயக்கமாக இருந்தாள், மற்றொரு பெண் ரவி பேசிய பேச்சுகளை பிரம்மீப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்.
கத்தி வைத்திருக்கும் ரவுடிக்கு இவன் பேசிய வார்த்தையை கண்டு கோபத்தில் "டேய் வாயால பேசுனா நீ கேக்க மாட்ட டா" என அப்பெண்னையும் சேர்த்து இவன் அருகில் இழுத்துட்டு வந்து, கத்தியை ரவி கழுத்துக்கு இடமிருந்து வலமாக இழுத்தான். நல்ல வேளை கத்தி ரவி கழுத்தில் படவில்லை. இன்னும் கத்தி ரவுடியிடமே இருந்தது.
ரவி மிகவும் பயந்தவாறே ஒரு அடி பின் வைத்தான். தன் இலக்கு தவறியதால் இன்னும் கோவத்தில் "இன்னைக்கு செத்தட நாயே" என தன் வலது காலால் அவன் வயிற்றை பலம் கொண்டு எட்டி உதைத்தான் .. ரவியோ "அம்மா" என கத்தி கொண்டே* வலியால் வயிற்றை பிடித்துக்கொண்டே கீழே விழுந்தான்.
* அந்த ரவுடியின் பிடியில் இருந்த பெண்ணோ "ரவி....................." என அலரினாள்.
ரவுடியின் பிடி சற்று தளர்ந்ததாள் அப்பெண், கையால் சிரமபட்டு முகத்தை மூடியிருக்கும் துப்பட்டாவை மேலே தூக்கினாள். அந்த முகம்...... அது ரவியின் அக்காவே தான்... ஆம் தேன்மொழியேதான் அது... கண்களில் நீர்வழிய நின்றுருந்தாள்.
சுற்றி உள்ள மக்கள் கூட்டமோ "ஏதோ நடக்க போகுதுனு" சலசலப்புடன் நின்றுகொண்டிருந்தனர். ரவி கண்களை மூடி வலியால் துடித்து கொண்டிருந்தான் . பின்பு சுயநினைவுக்கு வந்தவன் ,மங்களான பார்வையில் தன்னை பெயர் சொல்லி அழைத்தது யார் என வலியுடன் சுற்றி பார்த்து கொண்டிருந்தான். 
அப்போது ,,, அங்கே அப்பெண் முகத்தை பார்த்தான் ரவி.. அவனால் நம்ப முடியியவில்லை.. மங்களான பார்வையிலிருந்து மீண்டும் தன் கண்களை விரித்தவாரே பார்த்தான், 
அதிர்ச்சிதான் அவனுக்கு.....
"மூன்று வாரமுன்புவரை தான் நேசித்த தன் உடன்பிறந்த அக்கா , இப்போது கயவர்களின் பிடியில் மாட்டி துன்பபட்டு, மடிய போகிறாள் என்ற நினைப்பே " அவனை ஏதோ செய்தது .
"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் "
*என்பதை போல
*
உள்ளுக்குள் அவளை எப்படியாவது "ஏன்" தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று அவன் மூளையின் அனுமதியில்லாம் "மனது " முடிவெடுத்தது....
ரவியின் அந்த வெறி அவன் உடலெங்கும் பரவியது, எழுந்து கால்களை நீட்டியவாரே அமர்ந்திருந்தான். கையில் உள்ளங்கையின் அளவுடைய பெரிய "கருங்கல்" சிக்கியது, அதன் கூர்மையான பகுதி வெளியே இருக்குமாரு இருக்கமாக பிடித்திருந்தான். உடம்பில் புதிய இரத்தம் பாய எழுந்து நின்றான். தேன்மொழியோ மிரட்ச்சியுடன் ரவியை பார்த்து கொண்டிருந்தாள்.
ரவி உடம்பில் முறுக்குடன் முன்னே சென்றான், ரவுடியோ தேன்மொழியின் பிடியை விடுவித்துவிட்டு* கையில் கத்தியை கொண்டு ரவியின் நெஞ்சை குறி வைத்து ஓங்கினான், ரவியோ லாவகமாக குனிந்து அவன் குறியிலிருந்து தப்பித்து, தொடர்ந்து முன்னேறி அந்த ரவுடியை கடந்து சென்று பின்னால் உள்ள மற்றொரு ரவுடியை யாரும் எதிர்பாரா சமயத்தில் அவன் கையில் உள்ள அமிலத்தை அசையாமல் பிடித்துக்கொண்டு தன் சக்தியை திரட்டி கூர்மையான கல்லால் அவன் இடது கண் அருகே அடித்தான் ரவி..
அவ்வளவுதான் அந்த ரவுடி கண்ணில் வெட்டுபட்டு கிழே விழுந்தான் , தேன்மொழியின் தோழிக்கு இப்போது தான் உயிரே வந்தது. அவள் ஓடி சென்று தேன்மொழியை கட்டிக்கொண்டாள், இப்போது ரவி கையில் அமிலம் இருந்தது, அதை தூரமாக வீசிவிட்டு, திரும்புவதற்க்குள் மற்றொரு ரவுடியோ, ரவியின் முதுகிற்கு பின்னால் கத்தியை வைத்து குத்த ஓங்கினான்,அவன் முகத்தில் எல்லா முயற்சியும் தோல்வியின் பிரதிபளிப்பு இருந்தது.
அங்கே,,அப்போது ... 
தேன்மொழி, "ரவி.............. பின்னாடி பாருடா....." என கத்திக்கொண்டே , அந்த ரவுடியை தடுப்பதற்கு ஓடினாள் . அதற்குள் ரவி திரும்பி நின்றிருந்தான் , முதுகு நோக்கி ஓங்கிய கத்தி இப்போது ரவியின் வயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது.....
திக் திக் திக்..... அங்கே உள்ள அனைவருடைய மனதும்..
நொடியில் நான்கில் ஒரு பங்கு நேரத்தில் அந்த கத்தியை தன் இடது கையால் பிடித்தான் , அவன் வயிற்றுக்கு ஒரு சில சென்டிமீட்டர் தொலைவே பிடித்து நிறுத்தினான். கத்தியை ரவி பிடித்த பகுதியோ கூர்மையான பகுதி.,* இன்னும் ரவுடியோ கத்திக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான், மேலும் இன்னொரு கையையும் சேர்த்து அழுத்த துடங்கினான், கத்தி ரவியின் பிடியை மீறி அவன் வயிற்றுக்கு அருகில் நகர்ந்து சென்றது.
ரவியின் இடது கையில் இருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. தேன்மொழியோ அந்த ரவுடியை தன் கையால் அடித்து கொண்டிருந்தாள் . மக்களோ அச்சத்தில் யாரும் அருகில் வரவில்லை. 
தினமும் காலை தான் செய்த உடற்பயிற்சினால் தன் முழு பலத்தையும் கையில் வரவைத்துக் கொண்டு கத்தியை வளைக்க தொடங்கினான் , கத்தியோ" பட் " என்ற ஓசையுடன் உடைந்தது .. ரவுடி கத்தி உடைந்ததை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் தலையில் பின் மன்டையில், ரவி தன் வலது கையில் உள்ள கல்லால் அடித்தான். மூளை குழம்பி நினைவிழந்து சரிய தொடங்கினான்.
ரவிக்கு , அவன் சரிய சரிய பின்னால் நின்ற தன் அக்கா முகம் தெரிய தொடங்கியது. ரவி முகத்தில் தன் அக்காவை காப்பாற்றிய நிம்மதி இருந்தது. அவன் இடது உள்ளங்கையில் மிகவும் ஆழமாக வெட்டுபட்டிருந்தன, இரத்தம் நிற்க்காமல் வழிந்து கொண்டிருப்பதன் விளைவாக மெதுவாக ரவியின் கண்கள் சொக்கிபோய் , மயக்கம் அடைய தொடங்கினான் . அதற்க்குள் தேன்மொழி அவனை பிடித்து தன் மடியில் கிழே அமர்த்திக்கொண்டாள்.
தேன்மொழி* மயக்கமடைந்த ரவியை கண்ணீர் வடிந்த கண்களுடன் அவனது கன்னத்தை தட்டியவாரே "டேய் ரவி டேய் ரவி " என பிணாத்தி கொண்டிருந்தாள்" திடீரென சூழ்நிலையை புரிந்து
*"யாராவது ஆம்புலன்ஸ கூப்பிடுங்களேன்" என்று கத்தினாள்....
அவள் தோழியோ " தேனு அழுவாம ,மொதல்ல அவன் கையில வழியிர ரத்தத்த நிறுத்தனும்டி அவனுக்கு ஒன்னும் ஆகாது " என்றதும்,,*** தேன்மொழி உடனே அருகில் கிழே கிடந்த தன் துப்பட்டாவை அமர்ந்திருந்தவாரே எட்டி எடுத்து அவன் ரத்தம் வழிந்துகொண்டிருக்கும் இடது உள்ளங்கையில் சுற்றினாள் . அப்போதுதான் கவனித்தாள் ரவியின் வலது உள்ளங்கையிலும் அதிக சிராய்ப்புடன் சதைதோல்கள் கிழிக்கப்பட்டுருந்தது. 
கூர்மையான கல்லை இருக்கிபிடித்து அந்த ரவுடிகளை அடித்ததன் பாதிப்பே அது.. 
அதற்குள் ஒரு ஆட்டோவை அவள் தோழி மறித்து நிருத்தினாள் . மயக்கமடைந்த ரவியை ஆட்டோ ஓட்டுனரும், தேன்மொழியும், அவள் தோழியும் முயன்று ஆட்டோவில் ஏற்றி புறப்படும் போது, தேன்மொழியோ, அங்கே உள்ள ஆபத்தில் உதவாத மக்களை " எச்சி" போல் பார்த்து கொண்டிருந்தாள்.. பின்பு ரவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
அம்மா வடிவுக்கரசிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்மாவோ , உள்மனதில் அவனை வெருக்க சில காரணங்கள் இருந்தாலும் தன் பிள்ளைக்கு என்ன ஆனதோ என அலரியடித்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். அதற்குள் ரவிக்கு இடது கையில் 6 தையல்களும், வலது கையிலும் மருந்து இட்டு கட்டு போடப்பட்டது.. 
மணி மாலை 6:55 
மருத்துவமனையில் ரவி கட்டிலில் மயக்க நிலையில் படுத்து கொண்டிருந்தான். தேன்மொழியோ அம்மாவிற்க்கு நடந்ததை விளக்கி கூறிக்கொண்டிருந்தாள். 
அவள் தோழியோ "இன்னைக்கு நடந்ததை என்னாள் மறக்கவே முடியாதுடி , உன் தம்பி மட்டும் இல்லனா நாம இரண்டு பேரும் எப்பையோ அங்க செத்துருப்போம் . அவன் முழிச்சா நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுடி.. டைம் ஆச்சி அம்மா தேடுவாங்க* கிளம்புறேன்டி ... என கூறிவிட்டு* சென்றாள்.
ரவி மெதுவாக கண் விழித்தான்..
வெளியே அமர்ந்திருக்கும் அம்மா மற்றும் அக்காவிடம் அங்கே உள்ள நர்ஸ்லேடி "பேஷன்ட் முழிச்சிட்டாங்க யாராவது ஒருத்தர் போய் பாருங்க" என்றதும் அம்மா எழுந்தாள் அதற்குள் அக்கா தேன்மொழி அம்மாவை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள்..
வெளியே அமர்ந்திருக்கும் அம்மா மற்றும் அக்காவிடம் அங்கே உள்ள நர்ஸ்லேடி "பேஷன்ட் முழிச்சிட்டாங்க யாராவது ஒருத்தர் போய் பாருங்க" என்றதும் அம்மா எழுந்தாள் அதற்குள் அக்கா தேன்மொழி அம்மாவை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள்..
தேன்மொழி உள்ளே சென்றதும், ரவி அமைதியாக கண் விழித்தவாரே* இரண்டு உள்ளங்கையிலிலும் வலியுடன் படுத்திருந்தான். இவளை கண்டதும் தன் அக்காவிற்க்கு எதுவும் ஆகவில்லை, அவள் நன்றாக இருக்கிறாள், நான் காப்பாற்றி விட்டேன் என்ற பூரிப்ப்பால் அவன் முகம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் உதட்டில் சிறு புன்னகையும் உண்டானது.
மூன்று வினாடிதான் இருந்திருக்கும் ரவிக்கு அந்த இரவு நடந்தது நியாபகம் வந்தது, உடனே அவன் நெற்றியை சுருக்கினான், புன்னகை மறைந்தது, முகத்தில் கோவரேகைகள் தென்பட்டது. தன் கண்கள் மற்றும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொன்டான்.
*இவைகளை தேன்மொழி பார்த்ததும் அவனுக்கு தன் மேல் உள்ள கோவத்தை குறைக்கனும் என சிந்தித்தாள்.
*"சார் இன்னும் கோவத்தில்தான் இருக்கீங்க போல " என கூறினாள்.
ரவி அமைதியாகவே இருந்தான்
தேன்மொழி " டேய் அன்னைக்கு உன்ன அடிச்சது தப்புதான் " என சலித்து கொண்டே சொன்னாள்.
ரவியோ அவளை ஒரு வினாடி பார்த்து பின் மீண்டும் தலையை திருப்பி கொண்டான்.
தேன்மொழி பொய் கோபத்துடன் " என்னதான்டா பன்ன சொல்ர" என்றாள்
ரவி அவள் பின்னால் அம்மா வருவதை பார்த்து கொண்டிருந்தான்.
அம்மா வந்து அவன் அருகில் கட்டிலில் அமர்ந்து அவனிடம் " ரவி... கை வலி எப்படி பா இருக்கு" என்றாள்
ரவியோ இதுவரை அம்மா தன்னை "பா" போட்டு கூப்பிட்டது கிடையாது ... ஒரு வேளை தன் ஆசை மகளை காப்பாற்றியதன் விளைவாக இருக்குமோ என சிந்தித்து கொண்டே இருந்தான்.
அம்மா மீண்டும் அவன் கால்களை ஆட்டியவாரே* " ரவி.. என்னப்பா யோசனை " என்றாள்
ரவி சிந்தனையிலிருந்து மீண்டு " என்னம்மா சொன்னீங்க" என்றான்
அம்மா " கைல வலி எப்படி இருக்குனு கேட்டேன்" என்றாள்
                    
ரவி " இப்ப பாரவால்ல மா" என தேன்மொழியை பார்த்த வாரே கூறினாள்
டாக்டர் வந்ததும் அம்மா டாக்டரிடம் " என் பையனுக்கு ஒன்னும் இல்லல, பயப்படர மாதிரி எதும் இல்லல " என பதரியவாறு கேட்டாள்.
டாக்டரோ வடிவுக்கரசியிடம் " ஹி இஸ் ஆல்ரைட், நோ ப்ராபளம் . இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். பட் வீக்லி டூ டைம்ஸ் செக்கப்புக்கு வரனும் . 4 வீக்ஸ்ல தைலல்ல பிரிச்சிடுலாம் " என்றார் மற்றும் ரவியிடம் " தையல் போட்ட இடத்துல அதிக ஸ்ரையின் கொடுக்க கூடாது பா* " என்றார்
எல்லாம் முடிந்து வீட்டிற்க்கு வர இரவு 9 மணி ஆயிற்று.
அம்மா கடகடவென சமைத்து முடித்து ரவியையும் வற்ப்புருத்தி அழைத்து சாப்பிட அமர்ந்தார்கள்.
அம்மா தன் தட்டில் உள்ள சோற்றை சிறு உருண்டையாக எடுத்து ரவியின் வாய்யருகே கொண்டு சென்று " ரவி ஆஆ காட்டு" என்றாள்.
ரவி " மா.... எனக்கு ரைட் ஹான்ட்ல உள்ளங்கைல மட்டும் தான் அடிபட்டுருக்கு விரல்,லாம் அசைக்க முடிது நீங்க ஸ்பூன் கொடுங்க நானே சாப்டுகிறேன்" என்றான்
அம்மாவோ "....ம்... வாய தொறன்னு சென்னேன்ல " என சிறிது கண்டிப்புடன் கூறினாள்
ரவி வாயை திறந்து அம்மா ஊட்டிய சாப்பாட்டை சாப்பிட்டான் பின்பு மாத்திரைகளை உண்டு , தூங்க சென்றான்
சமையலறையில்,,,
*தேன்மொழி,. அம்மாவிடம் "ஏம்மா உன் புள்ள மொகத்துல ஏதோ மாற்றம் தெரிதா?" என கேட்டாள்.
"ஏன் உன்ன காப்பாத்தும் போது நீ பாக்கலையா" என அம்மாவும் எதிர் கேள்வி கேட்டாள்.
"இல்லம்மா மூனு வாரமா அவன் என்கூட பேசல" என்றாள் தேன்மொழி "மெதுவாக " .
அம்மா "என்னடி திடீர்னு தம்பி மேல பாசம் பொங்குற மாதிரி தெரிது , இவ்வளவு நாள் அவனை சனியன், நாயி,எரும என திட்டிய போது தெரியலையா" என்றாள் "நக்கலாக " 
". ஏன் நான் மட்டும் தான் திட்டினேன்னா, நீ தான் தினமும் அவனை கரிச்சி கொட்டிட்டே இருப்பே" என தேன்மொழி பதிலலித்தாள்.
அம்மா தேனிடம், அவள் தலையை தடவி என்னடி ஆச்சி என்றாள் அன்பாக. தேனோ அன்று இரவு நடந்ததை கூறினாள். உடனே அம்மா அவள் தலையில் செல்லமாக கொட்டி " அவனை எதுக்குடி அடிச்ச பாவம் என் மகன்" என்றாள் வருத்தத்துடன் .
தேன்மொழி "சாரிம்மா ஏதோ புத்தி கெட்டு அடிச்சிட்டேன்"
அம்மா "விடுடி அவன் கோவம் இரண்டு நாள்ல கொறைஞ்சிடும் நீ போய் தூங்கு" என்றாள்

No comments:

Post a Comment